உக்ரைனில் கடந்த இரவில் நடத்திய தாக்குதலில், அமெரிக்கா தயாரித்த பேட்ரியாட் தரையிலிருந்து ஏவப்படும் வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் அதி நவீன கின்சல் ஏவுகணை மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.
இதுதவிர, உக்ரைனிய சண்டைப்பிரிவுகள், வெடிமருந்து களஞ்சியங்களும் தாக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தயாரித்த பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை அண்மையில்தான் உக்ரைனுக்கு வழங்கியிருந்தது.
முன்னதாக, உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், ஆறு கின்சல்கள் உட்பட 18 ரஷ்ய ஏவுகணைகளை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக கூறினார்.



