வீதிப் போக்குவரத்து மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலைகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. மிகவும் கணிக்க முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்வது நமது விழிப்புணர்விலும், எச்சரிக்கையுணர்விலும்தான் தங்கியுள்ளது.
இந்தியாவில் பதிவாகியுள்ள விபத்து சம்பவமொன்று அதை மீளவும் நிரூபித்துள்ளது.
ஒரு மழை நாளில் வீதி மிக ஈரமாக வழுக்கும் நிலைமையில் காணப்படுகிறது. அப்போது அதிவேகத்தில் செல்லும் பைக் ஓட்டுநர் சமநிலையை இழந்து வீதியில் தவறி விழுகிறார். அவருக்குப் பின்னால் ஒரு லொறி வேகமாக வருகிறது. பைக் ஓட்டுபவர் அதைப் பார்த்துவிட்டு, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தவரை வேகமாக எழுந்து வீதியின் மறுகரைக்கு ஓடி வந்து விட்டார். டிரக் டிரைவர் பிரேக்கைப் பயன்படுத்துகிறார், ஆனால் ஓரிரு வினாடிகள் தாமதமாகிறது. பைக் ஓட்டுபவர் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிக்கிறார்.
வீதியில் வாகனம் செலுத்துபவர்கள் மெதுவாகவும், விழிப்பாகவும் வாகனத்தை செலுத்துவது வீதிப் பாதுகாப்பிற்கும், சமூகத்திற்கும் செலுத்தும் பங்களிப்பாகும் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
https://twitter.com/i/status/1643901706693128197



