பேலியகொட மெனிங் சந்தையில் அனைத்து மரக்கறிகளின் விலைகளும் வெகுவாக குறைந்துள்ளன.
பேலியகொட மெனிங் பொதுச் சந்தை சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபாசேன கருத்துப்படி, அதிக வரத்தும் குறைந்த தேவையும் விலை வீழ்ச்சிக்கு காரணமாகும்.
மெனிங் சந்தையில் பயிற்றை, கரட், கத்தரி, தக்காளி, லீக்ஸ், முட்டைக்கோஸ் மற்றும் மிளகாய் ஆகியவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்ததைத் தொடர்ந்து, பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அடுத்த சில வாரங்களில் மேலும் குறையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1