தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தற்போதைய தலைவரான தேசப்பிரிய, எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் பணியாற்றுவதற்கான விண்ணப்பத்தையும் சமர்ப்பித்துள்ளார்.
“நான் இரண்டு ஆணைக்குழுக்களுக்கும் விண்ணப்பித்துள்ளேன்,” என்று தேசப்பிரிய கூறினார்.
சுமார் 8000 பேர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பித்துள்ளனர்



