தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவுக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை உயர்த்தி வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் முதல் பதிவுக்கான 15,000 ரூபா கட்டணம் 50,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் 10,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

உரிமம் காலாவதியான முதல் மாதத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் தாமதக் கட்டணம் ரூ.10,000 ஆகவும், உரிமம் காலாவதியான 31 முதல் 90 நாட்களுக்குள் ரூ.25,000 ஆகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

90 நாட்களுக்கு மேல் பதிவு காலதாமதமாக இருந்தால், தாமதக் கட்டணம் 35,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், இந்த கட்டண திருத்தம் கடந்த ngப்ரவரி 20ஆம் திக்தி முதல் அமலுக்கு வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்தியப் படகுப் பொருட்கள் யாழில் இன்று பகிரங்க ஏலம்

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச...

ஈரானின் புதிய உச்ச தலைவர் சுயநினைவின்றி மருத்துவமனையில்?

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி சுயநினைவின்றி இருப்பதாகவும், ஈரானிய...

நுவரெலியா பிரதேசசபை தவிசாளர் கைது!

ஒரு கட்டிடத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்