சிவனொளிபாதமலை யாத்திரிகளை ஏற்றிய பேருந்து 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது: 2 பேர் பலி!

Date:

சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பேருந்து ஒன்று நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் 100 அடி பள்ளத்துக்குள் விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 9.15 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.

காயமடைந்தவர்கள் கினிகத்தேன, வட்டவளை மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிவனொளிபாதமலைக்கு சென்றுவிட்டு திரும்பும் வேளையில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இராணுவம் மற்றும் பொலிஸ் குழுக்கள் காயமடைந்தவர்களை மீட்டுள்ளதுடன், இருள் சூழ்ந்திருந்தமையினால் நோயாளர்களை மீட்பதில் கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப்

ஈரான் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தோஹாவில் நடைபெறும் என்றும், இதில்...

வடக்கு ஆளுனரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

அதிகார பரவலாக்கல் அரசியல் தத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட வடக்கு ஆளுனரால், வவுனியா...

காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி

மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்