சிவனொளிபாதமலை யாத்திரிகளை ஏற்றிய பேருந்து 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது: 2 பேர் பலி!

Date:

சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பேருந்து ஒன்று நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் 100 அடி பள்ளத்துக்குள் விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 9.15 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.

காயமடைந்தவர்கள் கினிகத்தேன, வட்டவளை மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிவனொளிபாதமலைக்கு சென்றுவிட்டு திரும்பும் வேளையில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இராணுவம் மற்றும் பொலிஸ் குழுக்கள் காயமடைந்தவர்களை மீட்டுள்ளதுடன், இருள் சூழ்ந்திருந்தமையினால் நோயாளர்களை மீட்பதில் கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால்...

முதல்வர் ஆகிறார் விஜய்… தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ஊடே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்