கொழும்பில் சில இடங்களிற்குள் நுழைய 7 பேருக்கு தடை!

Date:

இன்று (20) பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட 7 பேர், ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலிமுகத்திடல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல வீதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (20) உத்தரவிட்டுள்ளார்.

கோட்டை, கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற் கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டவிரோதமான முறையில் நடந்து கொண்டாலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, காவல்துறை அதிகாரத்தைப் பயன்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வியாபாரி வீட்டில் சிக்கிய பொலிஸ்காரர்!

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று வியாழக்கிழமை...

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்