காதல் வெற்றியடைந்து திருமணம் நடக்க வேண்டி வழிபடச் சென்ற யுவதியை வன்புணர்ந்த மதகுருவுக்கு 15 வருட சிறைத்தண்டனை!

Date:

தமது காதல் வெற்றியடைந்து திருமணம் இனிதாக நிறைவேற வேண்டுமென வேண்டி வழிபாட்டிடமொன்றிற்கு வந்த யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மதகுரு ஒருவருக்கு 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இன்று (20) தீர்ப்பளித்தார்.

10 வருடங்களுக்கு முன்னர் இந்தக் குற்றத்தை பிரதிவாதி செய்ததற்கு நேரில் கண்ட சாட்சியங்கள் இல்லையென்றாலும்,  சந்தேகத்திற்கு இடமின்றி பிரதிவாதி மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப்பட்டுள்ளதால் தண்டனை வழங்கியுள்ளார்.

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வழிபாட்டிடம் ஒன்றை நடத்தி வந்த  சனுன் பதுர் மொஹமட் என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் யுவதி ஒருவரை அவரது அனுமதியின்றி வன்புணர்ச்சி செய்ததாக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட நீண்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட யுவதி தனது காதலனுடன் குற்றம் சாட்டப்பட்டவர் நடத்தும் வழிபாட்டிடத்திற்குச் சென்று தனது திருமணம் வெற்றியடைய இறைவனை வேண்டி பூஜை செய்து வந்ததாகவும், அதன் போது காதலனை வழிபாட்டிடத்திற்கு வெளியே தொலைவான இடமொன்றிற்கு மதகுரு அனுப்பி வைத்தது தெரிய வந்துள்ளது.

பின்னர், வீட்டில் இருந்த குற்றவாளியின் மனைவியிடம், பூஜைக்கு முட்டை தேவை என்று கூறி, வீட்டை விட்டு வெளியே அனுப்பிய பின், வழிபாட்டிடத்தின் கதவை மூடி யுவதி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவத்திற்கு நேரில் கண்ட சாட்சிகள் இல்லை என்றும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் இல்லையென்றாலும், குற்றம் சாட்டப்பட்டவரின் டிஎன்ஏ மாதிரிகள், இளம் பெண்ணிடம் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டதை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

காதல் வெற்றியடைந்து திருமணம் சிறப்பாக நடக்க வேண்டி, குற்றம் சாட்டப்பட்டவரின் வழிபாட்டிடத்திற்குச் சென்ற யுவதியை குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்ததாக நீதிபதி முடிவு செய்து, குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார்.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக ரூபா 10000/- அபராதம் விதித்த நீதிபதி, அபராதத்தை செலுத்தாவிடின் மேலதிக 06 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: அமெரிக்காவின் புதிய அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே உள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடலில் அமெரிக்க...

‘இந்த போப் எனக்கு வேண்டாம்’: அடம் பிடிக்கும் ட்ரம்ப்!

ஈரானில் அமெரிக்கா தலைமையிலான போரை போப்பாண்டவர் விமர்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி...

யாழில் இளைஞன் கொலை: காதல் விவகாரத்தால் விபரீதம்?

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்