தமிழ் அரசு கட்சியின் பட்டிருப்பு வேட்பாளர் அறிமுகம்

Date:

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பும் தேர்த்தில் தொகுதியில் உள்ளடங்கும் மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென் மேற்கு ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (29) பெரியகல்லாறு ப்ரித்தி மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது தொடக்கவுரையை கணேசமூர்த்தி சுதர்ஷனும், தலைமையுரையை கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளை செயலாளர் ந.துஷியந்தனும் நிகழ்த்தினர்.

பின்னர் உள்ளுராட்சி மன்றங்களில் வேட்பாளர்களாகப் போட்டியிடுவோர் தம்மைச் சுய அறிமுகம் செய்து கொண்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன. இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கட்சியின் தொண்டர்கள், மற்றும் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார்: சாரதி, சிறுமி பலி!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த காரொன்று,...

பல லட்சம் பக்தர்கள் திரண்ட முருக பக்தர்கள் மாநாடு: அநீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் ஒன்றிணைவோம் – பவன் கல்யாண் பேச்சு

நீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மதுரையில்...

ஈரானின் அணுசக்தி, ஏவுகணை இலக்குகளை அழிக்கும் இலக்கின் அருகில் இருக்கிறோம்: இஸ்ரேல் பிரதமர்!

ஈரானில் இஸ்ரேல் தனது இலக்குகளை அடைவதற்கு மிக அருகில் உள்ளது என்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்