24.5 C
Jaffna
March 9, 2025
Pagetamil
இலங்கை

யாழ் ரௌடிகளை கைது செய்ய உத்தரவு!

இன்று சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி போலீஸ்மா அதிபர்மகிந்த குணரட்ண உத்தரவு பிறப்பித்துள்ளார்

சுன்னாகம் பகுதியில் இன்று மதியம் சினிமா பாணியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்மகிந்த குணரட்ண யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்

இரண்டு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக இடம் பெற்று வரும் முரண்பாட்டின் காரணமாகவே இன்றைய தினம் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளை தெரிய வந்துள்ளது

எனினும் பட்டப்பகலில் பொதுமக்கள் பார்த்திருக்க இந்த சம்பவம் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவே உடனடியாக தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதோடு கொடுத்த தாக்குதல் சம்பந்தமான பூரண அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி போலீஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு எஸ்கேப்?

Pagetamil

பிரதேச செயலக உத்தியோகத்தரின் கதிரையை எடுத்து சென்றவருக்கு விளக்கமறியல்: அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு!

Pagetamil

8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கணித ஆசிரியர் கைது!

Pagetamil

மோசமாக நடந்த இ.போ.ச நடத்துனர் பணி இடைநீக்கம்

Pagetamil

சாணக்கியன் சொன்னதை நிரூபித்து காட்டட்டும்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!