26.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

சட்டத்தரணிகளின் போராட்டத்திற்கு பொலிசார் பி அறிக்கை

நீதித்துறையில் சட்டமா அதிபரின் தலையீடுகளை கண்டித்து ஜனவரி 18ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த சட்டத்தரணிகள் குழுவிற்கு எதிராக கெசல்வத்தை பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

பி அறிக்கையின்படி, சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, நுவான் போபகே மற்றும் சேனக பெரேரா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று தேர்தல் சட்டங்கள் மற்றும் தேசிய வீதிச் சட்டத்தின் விதிகளை மீறி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததாக கெசல்வத்தை பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்வதிலிருந்து கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்தவை தடுக்க சட்டமா அதிபர் முயற்சித்ததை கண்டித்து சட்டத்தரணிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!