கைதான செபால் அமரசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

Date:

கண்டி தலதா மாளிகை மற்றும் பௌத்த மதத்தை அவதூறு செய்யும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர் செபால் அமரசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமரசிங்க நேற்று (05) பொரலஸ்கமுவவில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் பௌத்த மதத்தை அவதூறு செய்தமை தொடர்பாக அவர் மீதும் ஜனக சேனாதிபதி மீதும் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சிஐடிக்கு அறிவுறுத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் பொத்துஹெரவில் போலியான ஸ்ரீ தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு எழுதிய கூட்டுக் கடிதத்தில், பௌத்த மதத்தை புண்படுத்தும் வகையிலான கருத்துக்கள் அடங்கிய காணொளி காட்சிகளை சேபால அமரசிங்க சமூக வலைத்தளங்களில் பரப்பினார்.

இது பௌத்த மதத்திற்கும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள மகாநாயக்க தேரர்கள், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்