25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

காணமல் போன மாணவியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் காணாமல் போன கெங்கல்லை, அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

15 வயதுடைய சிறுமி பாடசாலை முடிந்து வீடு திரும்பவில்லை என சிறுமியின் உறவினர்கள் தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி பாடசாலையை முடித்து விட்டு பாடசாலையைச் சேர்ந்த மற்றுமொரு சிறுமியுடன் புகையிரதத்தில் கொழும்பு நோக்கி பயணித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மற்றைய சிறுமியை இளைஞர் ஒருவர் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.
ரயிலில் இருந்த இந்த சிறுமி காணாமல் போனார்.

இந்த சிறுமியின் இருப்பிடம் தெரிந்தவர்கள் கீழ்கண்ட எண்கள் மூலம் தெரியப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தெல்தெனிய பொலிஸ் – 081-2374073

OIC தெல்தெனிய – 071 – 8591066

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொருளாதார நெருக்கடியை தடுக்கவே இறக்குமதி வரி – ஜனாதிபதி

east tamil

தமிழ் அரசு கட்சியை மீட்டெடுக்க வேண்டுமெனில் பதில் மும்மூர்த்திகள் பதவி விலக வேண்டும்!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் நிரப்பப்படாத 162 அரச பணியாளர்கள் பதவிகள் – மருதலிங்கம் பிரதீபன்

east tamil

சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு

east tamil

கல்வி அமைச்சின் அதிபர் நியமன நடவடிக்கை

east tamil

Leave a Comment