எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வாகன இலக்கத் தகடுகளின் மாகாணங்களை குறிக்கும் ஆங்கில எழுத்துகள் அகற்றப்படும் எனவும், அதற்கமைய எதிர்காலத்தில் வெளியிடப்படும் புதிய இலக்கத் தகடுகளில் ஆங்கில எழுத்துகள் அச்சிடப்பட மாட்டாது எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இன்று (30) காலை தெரிவித்தார்.
புதிய பதிவு மற்றும் ஏற்கனவே உள்ள இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களின் பதிவை மாற்றுவதற்கான கட்டணங்கள் கட்டாயம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வீரசிங்க மேலும் குறிப்பிட்டார்.




