பெலியத்த, மஹிலவில் நீர் வழங்கும் திட்டத்தின் நீர் குழாய்களை திருட முற்பட்ட பெலியத்த பிரதேச சபையின் தலைவரும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (29) பிற்பகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குழாய்களை வெட்டி லொறியில் ஏற்றி செல்வதாக அப்பகுதி மக்கள் மூலம் பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
பிரதேச சபைத் தலைவரே இந்தத் திட்டத்தின் தலைவர் என நம்பப்படுகிறது.
பிரதேச சபை தலைவரின் சகோதரரின் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




