இலங்கை மின்சார சபை நவம்பர் மாதத்தில் 35.6 பில்லியன் ரூபாவை மொத்த வருமானமாக ஈட்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதைய கட்டணக் கட்டமைப்பின்படி, ஒக்டோபர் மாதத்திற்கான மின்சாரசபையின் மொத்த வருமானம் 33.6 பில்லியன் ரூபாவாகும் என அமைச்சர் கூறினார்.
2023 ஜனவரியில் மின் நிலையங்களை இயக்குவதற்கு கனரக எரிபொருள் எண்ணெய், நாப்தா மற்றும் டீசல் ஆகியவற்றின் தேவை ரூ.35 பில்லியன் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
ஜனவரி மாதத்திற்கான நிலக்கரி கொடுப்பனவுகளுக்கான தேவை ரூ.38.45 பில்லியன் என அவர் குறிப்பிட்டார்.




