மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (25) அதிகாலை பாரிய மின்னல் தாக்கம் ஏற்பட்டது.
இதனால் ஏறாவூர் -றஹ்மானியா பாடசாலை வீதி எட்டாம் ஒழுங்கையிலுள்ள இஸ்மாயில் அன்வர் என்பவரது கால் நடைகள் கருகி சாம்பலாகியுள்ளன.
9 ஆடுகள், 11 கோழிகள், 4 சேவல்கள், 3 வாத்துக்கள் போன்றவை கருகி சாம்பலாகியுள்ளன.
அத்துடன் குறித்த பகுதிகளிலுள்ள பலரின் வீட்டு மின்சாரப் பொருட்களும் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் தாழ் நிலங்கள் வெள்ள நீரால் நிரம்பி காணப்படுகின்றது.

-க.ருத்திரன்-




