24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

பணியிடத்தில் மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் பலி

முல்லைத்தீவு விசுவமடுபகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் மின்சாரம் தாக்கியதில் 17 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விசுவமடு 10 ஆம் கட்டைப்பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் கடை ஒன்றில் நேற்று (14) காலை இந்த சம்பவம் நடந்தது.

தேவன் கபிலன் என்ற சிறுவனே உயிரிழந்தார்.

மின்ஒட்டும் கருவிக்கு மின் இணைப்பு செய்த போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்த பகுதி இளைஞர்களால் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ,பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment