தென்கொரியா நெரிசலில் உயிரிழந்தவர்களில் இலங்கையரும் ஒருவர்!

Date:

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நேற்றிரவு ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில், 27 வயதுடைய இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.

தென்கொரியாவில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தில் கண்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தென்கொரியாவிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து செயற்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வேறு யாராவது இலங்கையர் காயமடைந்தார்களா அல்லது இறந்தார்களா என்பது குறித்த விவரங்களை தற்போது சரிபார்க்க முடியாது என தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டங்களிற்காக ஒரு குறுகிய தெருவில் பெரும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 151 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானிகள் கைபேசியில் புகைப்படம் எடுத்ததே விமான விபத்திற்கு காரணம்

சியோலின் தணிக்கை மற்றும் ஆய்வுக் குழுவின் அறிக்கையின்படி, 2021-ல் இரண்டு தென்...

பிரீமியம் இலக்கத்தகட்டை விரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அதிக மதிப்புள்ள வாகனப் பதிவு எண்களைத் தேர்ந்தெடுக்கும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை...

ரஷ்ய எண்ணெய்க்கு சீன நாணயத்தில் பணம் செலுத்தவுள்ள இலங்கை

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ள இலங்கை, அதற்கான பணத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்