தென்கொரியா நெரிசலில் உயிரிழந்தவர்களில் இலங்கையரும் ஒருவர்!

Date:

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நேற்றிரவு ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில், 27 வயதுடைய இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.

தென்கொரியாவில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தில் கண்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தென்கொரியாவிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து செயற்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வேறு யாராவது இலங்கையர் காயமடைந்தார்களா அல்லது இறந்தார்களா என்பது குறித்த விவரங்களை தற்போது சரிபார்க்க முடியாது என தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டங்களிற்காக ஒரு குறுகிய தெருவில் பெரும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 151 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...

AUTO X- மோட்டார் வாகனக் கண்காட்சி 2026 யாழ்ப்பாணத்தில்!

வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில்,...

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்