23.7 C
Jaffna
March 8, 2025
Pagetamil
சினிமா

விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாததால்: சின்னத்திரை நடிகர் அர்னவ் கைது

மனைவியை தாக்கியதாக புகார்அளிக்கப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாததால், படப்பிடிப்பு தளத்தில் வைத்து சின்னத்திரை நடிகர் அர்னவ் கைது செய்யப்பட்டார்.

சின்னத்திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, அர்னவ் புதிய தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரில் அவருடன் நடிக்கும் கதாநாயகிக்கும், அவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறி கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கர்ப்பிணியான திவ்யா, தனது கணவன் அர்னவ் தன்னை தாக்கியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் மீது போரூர் அனைத்து மகளிர் போலீஸார் அர்னவ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

படப்பிடிப்பின்போது கைது: இந்த வழக்கு தொடர்பாக போரூர் போலீஸார் அர்னவை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறினர். ஆனால், அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கூந்தம்பாக்கம் ஆர்.வி.கார்டனில் படப்பிடிப்பு இல்லத்தில் இருந்த அர்னவை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“குடும்பத்துடன் விரதம் இருக்கும் நயன்தாரா” – ‘மூக்குத்தி அம்மன் 2’ படவிழாவில் தயாரிப்பாளர் தகவல்

Pagetamil

காதல் முறிவு: விஜய் வர்மாவை பிரிந்தார் தமன்னா!

Pagetamil

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!