ட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தில் ரூ. 6.5 மில்லியன் மதிப்புள்ள கார்
மற்றும் ரூ. 25 மில்லியன் பெறுமதியான ஜீப் ஆகியவற்றை கொள்வனவு செய்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இவர், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் தனது தந்தை சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தியே குறித்த இளைஞர் வாகனங்களை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.




