ரூ.31 மில்லியன் பெறுமதியான வாகனங்கள் வாங்கிய 20 வயது இளைஞன் கைது!

Date:

ட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தில் ரூ. 6.5 மில்லியன் மதிப்புள்ள கார்
மற்றும் ரூ. 25 மில்லியன் பெறுமதியான ஜீப் ஆகியவற்றை கொள்வனவு செய்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இவர், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் தனது தந்தை சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தியே குறித்த இளைஞர் வாகனங்களை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பிக்மீ சாரதியிடம் கொள்ளையடித்தவர்கள் கைது!

இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான...

யாழ்- தீவுகளுக்கான படகு பயண நேர மாற்றம்

யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் நாளை...

3வது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை… என்னை கருணைக்கொலை செய்யுங்கள்: கதறும் கணவன்!

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்