20ஐ ஆதரித்து விட்டு 22ஐ எப்படி ஆதரிப்பது?: சாகர காரியவசம்!

Date:

தனக்கு தெரிந்தவரையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் 22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

சுயமரியாதையுடன் அந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டிற்கு பெரும் அழிவை ஏற்படுத்திய மற்றும் அராஜகத்திற்கு வழிவகுத்த 19 வது திருத்தத்தை மாற்றியமைக்க 20 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஒரு குழுவினர் 19 வது திருத்தத்தை மீண்டும் நல்லதென எவ்வாறு பிரகடனம் செய்ய முடியும் என சாகர காரியவசம் கேள்வி எழுப்பினார்.

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. சட்டமூலம் மீதான இறுதி வாக்கெடுப்பு வரும் 21ஆம் திகதி பிற்பகல் நடைபெறும்.

spot_imgspot_img

More like this
Related

பிக்மீ சாரதியிடம் கொள்ளையடித்தவர்கள் கைது!

இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான...

யாழ்- தீவுகளுக்கான படகு பயண நேர மாற்றம்

யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் நாளை...

3வது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை… என்னை கருணைக்கொலை செய்யுங்கள்: கதறும் கணவன்!

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்