27.6 C
Jaffna
March 28, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

இந்தோனேசியாவில் கால்ப்பந்து போட்டியில் கலவரம்: 129 பேர் பலி

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள  மலாங் நகரத்தில்சனிக்கிழமை கால்ப்பந்து போட்டியில் ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தது 129 பேர் கொல்லப்பட்டனர்.

இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டதையடுத்து, “கலவரங்களை” கட்டுப்படுத்துவதற்காக, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாகவும் காவல்துறை கூறியது. அப்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் புகையை தவிர்க்கும் முயற்சியில் வெளியேறும் வாயிலுக்கு ஓடினர். குழப்பத்தில் சிலர் மூச்சுத் திணறி, பலர் மிதித்து இறந்தனர்.

கிழக்கு ஜாவா போலீஸ் தலைவர் நிகோ அஃபின்டா ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் கூறியதாவது: இந்த சம்பவத்தில், 129 பேர் இறந்தனர், அவர்களில் இருவர் போலீஸ் அதிகாரிகள். 34 பேர் மைதானத்திற்குள் இறந்தனர், மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் இறந்தனர்.

கிழக்கு ஜாவாவின் மலாங் ரீஜென்சியில் நடந்த ஆட்டத்தில் பெர்செபயா சுரபயாவிடம் அரேமா 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டு  கிளப்புகளின் ரசிகர்களிடையே சண்டை ஏற்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

சுமார் 120 பேர் கொல்லப்பட்டதாக மலாங் ரீஜென்சி சுகாதார அலுவலகத்தின் இயக்குனர் வியந்தோ விஜோயோ தெரிவித்தார். காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் தொகுத்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். அவரது கருத்துக்கள் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறுகின்றன.

“120 க்கும் மேற்பட்டோர் இறந்தனர், அவர்கள் குழப்பம், கூட்ட நெரிசல், மிதித்தல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றால் இறந்தனர். காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, சந்தேகத்திற்கு இடமின்றி நூற்றுக்கும் அதிகமாக இருந்தது, மேலும் அவர்கள் பல அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்“ என்றார்.

ஆயிரக்கணக்கான அரேமா ஆதரவாளர்கள் தங்கள் அணி தோல்வியடைந்த பிறகு ஆடுகளத்திற்கு ஓடினர், இது சண்டையைத் தூண்டியது. பெர்செபயாவைச் சேர்ந்த வீரர்கள் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினர், அதே நேரத்தில் அங்கு தங்கியிருந்த மற்ற அரேமா வீரர்களும் தாக்கப்பட்டனர்.

தகவல்களின்படி, கஞ்சுருஹான் மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் பீதியைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதன் விளைவாக பல உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

இந்தோனேசிய அரசாங்கம் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன், கூட்ட நெரிசலுக்கான காரணங்களை ஆராய்வதாக உறுதியளித்தது.

இந்தோனேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சர் ஜைனுடின் “இந்த சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்… ஆதரவாளர்கள் மைதானத்தில் இருந்து கால்பந்து போட்டிகளை பார்க்கும் நேரத்தில் கால்பந்து ஆட்டத்தை காயப்படுத்திய வருந்தத்தக்க சம்பவம் இது.” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment