26.3 C
Jaffna
March 16, 2025
Pagetamil
இலங்கை

போராடியதற்காக கைதான மாணவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவர்!

ஜே.வி.பி.யின் இளைஞர் முன்னணியான சோசலிச வாலிபர் சங்கத்தின் (SYU) தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர உட்பட 83 ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் நேற்று ஆர்ப்பாட்ட பேரணியின் போது தடுத்து வைத்துள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்கக் கோரியும் அடக்குமுறைக்கு எதிராகவும் SYU உடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நேற்று லிப்டன் சுற்றுவட்டத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் டீன்ஸ் சாலையில் அணிவகுத்துச் சென்றனர், அங்கு அவர்கள் மீது கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டது.

மருதானை டீன்ஸ் வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.

இந்த போராட்டத்தால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி ஒன்று, எரங்க குணசேகர மற்றும் தொழிற்சங்கத்துடன் இணைந்த பிக்கு ஒருவரை பொலிஸார் தாக்குவதைக் காட்டுகிறது.

விகாரமஹாதேவி பூங்கா வளாகத்திலும் போராட்டக்காரர்கள் குழு ஒன்று கூடியது.

கைது செய்யப்பட்ட 83 ஆர்ப்பாட்டக்காரர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மருதானை பொலிஸில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பார்வையிட்டார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அவர்கள் எதிர்ப்பை மட்டுமே தெரிவிப்பதாகக் கூறி அவர்களை விடுதலை செய்யுமாறு கோரினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மக்கள் பணத்தை எப்படியெல்லாம் ஏப்பமிட்ட ரணில்: வெளியான அதிர்ச்சி தகவல்!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

சொன்னபடி செயற்பட தவறும் ஜேவிபி: பேராயர் அதிருப்தி

Pagetamil

5 மாகணங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Pagetamil

துணை இராணுவக்குழுவை இயக்கிய தேசபந்து தென்னக்கோன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!