சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூத்த நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (08) உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய சம்பவம் தொடர்பில் பிணையில் இருக்கும் போதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த ஜூலை மாதம் 14ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து சந்தேகநபர் குற்றமிழைத்துள்ளதாக பொலிஸார் அபேரத்னவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதியின் சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன, தமிதாவிற்கு எந்தவொரு நிபந்தனையிலும் பிணை வழங்குமாறு நீதவானிடம் கோரினார்.
சந்தேகநபர் ஒரு சம்பவத்திற்காக பிணையில் இருந்த போது இதேபோன்ற குற்றத்தை செய்து பிணை சட்டத்தை மீறியுள்ளதாக தெரிவித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்து சந்தேக நபரை விளக்கமறியலில் வைத்தார்.




