சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூல விவாதம் இன்று

Date:

உத்தேச சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலம் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு சட்டமூலம் செவ்வாய்க்கிழமை (06) பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்த போதிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பில் விவாதம் நடத்துமாறு கோரியதையடுத்து இன்று குறித்த சட்டமூலம் மீதான விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

குறித்த சட்டமூலத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் விவாதம் நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பாராளுமன்ற அலுவல்களுக்கான குழு, சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தை செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்ற முடிவு செய்திருந்தது.

2022 பட்ஜெட்டில், அரசாங்க வருவாயை உயர்த்துவதற்கும், கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ஒரு நடவடிக்கையாக சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆண்டுக்கு விற்றுமுதல் ரூ.120 மில்லியனுக்கும் அதிக வருமானமுடையவர்களிடமிருந்து 2.5 சதவீதம் என்ற விகிதத்தில் வரி அறவிடுவதே இந்த சட்டமூலத்தின் நோக்கம்.

spot_imgspot_img

More like this
Related

சீனாவின் தோளில் வைத்து சுடும் ஏவுகணைகளை பயன்படுத்தி அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்?

கடந்த மாதம் தென்மேற்கு ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானியை மீட்க ஆபத்தான...

யாழ் மேல் நீதிபதி இடமாற்ற விவகாரம்: யாழ் சட்டத்தரணிகள் சங்கத்திற்குள் குழப்பம்… தலைவர் பதவி விலகினார்; ஒரு பகுதியினர் ஜனாதிபதிக்கு கடிதம்

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் வடக்கு...

மியான்மர் வெடிவிபத்தில் 45 இற்கும் அதிகமானவர்கள் பலி

மியான்மரின் வடகிழக்குப் பகுதியில், சுரங்கப் பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்