சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிருவாகி சமந்தா பவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
சமந்தா பவர் 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி சனிக்கிழமை அவர் இலங்கை வரவுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு உட்பட பல அரச அதிகாரிகளுடன் சமந்தா பவர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அமெரிக்கா பங்கேற்கும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் யெலன் நேற்று தெரிவித்ததை அடுத்து அவரது விஜயம் இடம்பெற்றுள்ளது.




