விபத்தில் இளைஞன் பலி!

Date:

கொழும்பு 07, கறுவாத்தோட்டம் விஜேராம சந்தியில் நேற்று (06) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரொஸ்மீட் பிளேஸில் இருந்து விஜேராம சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக வேகம் காரணமாக மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதாக அவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சாரதி மது போதையில், கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கறுவாத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்