இலங்கையிடமிருந்து சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் உத்தரவாதம்!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றின் இலங்கைக்கான விஜயத்தின் போது கடனாளிகளிடமிருந்து போதிய உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை முகங்கொடுக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவிப் பொதியை அறிமுகப்படுத்துவதற்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்து பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் தாங்க முடியாதது என தீர்மானிக்கப்பட்டுள்ளதால், இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியைப் பெறுவதற்கு, கடன் நிலைத்தன்மையை இலங்கை மீட்டெடுக்கும்  போதுமான உத்தரவாதம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. .

இலங்கைக்கு விஜயம் செய்யும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவிற்கு மசாஹிரோ நோஸாகி மற்றும் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் தலைமை தாங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...

ஏப்ரல் 2026 வறுமைக் கோடு: ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளுக்கு ரூ.17,117 அவசியம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics)...

மட்டக்களப்பு: 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டில் 60 வயது தந்தை கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்