அடுத்த மாதம் 4ஆம் திகதி விமல் வீரவன்ச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என சுயாதீன கட்டிகளின் கூட்டணி தெரிவித்துள்ளது.
புதிய அரசியல் கூட்டணியின் பெயரும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் அறிவிக்கப்படடவுள்ள புதிய கூட்டணி தொடர்பான பல சுற்றுக் கலந்துரையாடல்கள் கடந்த சில நாட்களாக சுயாதீனக் கட்சி பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றன.




