2022 அரச செலவீனம் 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பு!

Date:

2022 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் செலவினம் 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. .

2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, அரசாங்கத்தின் செலவு ரூ.2,796.44 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நேற்று முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட சட்டமூலத்தின் ஊடாக அரசாங்கத்தின் செலவினம் 3,275.8 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்துக்கான ஒதுக்கீடு 13.4 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கே அதிகளவான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வசம் உள்ள அமைச்சுக்கு கிட்டத்தட்ட ரூ.734 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிதியமைச்சுக்கு ரூ.146 பில்லியன் ரூபா பாதுகாப்பு அமைச்சுக்கு ரூ.137 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி கல்வி அமைச்சுக்கு 120 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு 124 பில்லியன் ரூபா மற்றும் வர்த்தக அமைச்சுக்கு 193 பில்லியன் ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பிக்மீ சாரதியிடம் கொள்ளையடித்தவர்கள் கைது!

இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான...

யாழ்- தீவுகளுக்கான படகு பயண நேர மாற்றம்

யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் நாளை...

3வது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை… என்னை கருணைக்கொலை செய்யுங்கள்: கதறும் கணவன்!

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்