ஆளில்லாத பகுதியில் வெட்டுக்காயத்துடன் யுவதியின் சடலம்!

Date:

யக்கலமுல்லை மினுவந்தெனிய பொல்கஹகொட பிரதேசத்தில் உள்ள கால்வாயில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் அடையாளம் காணப்படவில்லை.

சுமார் 35 வயதுடைய பெண் என்றும், அவர் கருப்பு பாவாடை மற்றும் சிவப்பு மேலாடை அணிந்துள்ளார்.

ஆள் நடமாட்டமற்ற வெறிச்சோடிய பிரதேசத்தில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யுவதியின் கழுத்தில் ஆழமான வெட்டுக்காயம் காணப்படுகிறது.

யுவதியின் சடலம் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை அடையாளம் காண்பதற்கு யக்கலமுல்ல பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பிக்மீ சாரதியிடம் கொள்ளையடித்தவர்கள் கைது!

இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான...

யாழ்- தீவுகளுக்கான படகு பயண நேர மாற்றம்

யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் நாளை...

3வது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை… என்னை கருணைக்கொலை செய்யுங்கள்: கதறும் கணவன்!

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்