அனைத்து பிரிவினருக்கும் சராசரியாக 75% மின்சார கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின் கட்டண அதிகரிப்பு நாளை (10) முதல் அமுலுக்கு வரும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
30 அலகுகளுக்கும் குறைவான நுகர்வோர் 264% அதிகரிப்பையும், 31 முதல் 60 அலகுகளுக்கு இடையில் உள்ள நுகர்வோர் 200% மின் கட்டண அதிகரிப்பை எதிர்கொள்வார்கள் எனவும் ரத்நாயக்க தெரிவித்தார்.
மாதாந்தம் 61 முதல் 90 அலகுகள் வரை உள்ள நுகர்வோர் 125% உயர்வையும், 91 மற்றும் 120 அலகுகளுக்கு இடையில் உள்ள நுகர்வோர் 89% அதிகரிப்பை எதிர்கொள்வர்.
121 முதல் 180 யூனிட்களுக்கு இடைப்பட்ட மாதாந்திர உபயோகம் கொண்ட நுகர்வோர் 79% அதிகரிப்பை எதிர்கொள்வர்.
மின்கட்டண அதிகரிப்பு பட்டியல் வருமாறு-





