அரசியலமைப்பு மற்றும் நாட்டின் சட்டத்திற்கு முரணாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சேமசிங்க இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, சபாநாயகர் அத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்மறையான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்றார்.
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பு ரீதியாக சத்தியப்பிரமாணம் செய்து சட்டத்தை நிலைநிறுத்துவதாக உறுதியளித்துள்ளனர் என்றார்.
எவ்வாறாயினும், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்கு மாறாக, தன்னிச்சையாக செயற்பட முடியும் என நம்பினால், சட்டத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எம்.பி சேமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அனைவரும் சட்டத்தை மதிக்காத நிலைக்குத் தள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவாதத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவுக்குச் சென்ற முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 88 மற்றும் 89 கலவரங்களுக்கு ஆதரவாக இருந்ததை நினைவு கூர்ந்தார். கிளர்ச்சியை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்த உதவிகோரியதையும் சுட்டிக்காட்டினார்.
வன்முறைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கொலைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைத்தல் போன்றவற்றை தமது தரப்பு நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் வன்முறையில் ஈடுபட்ட போதிலும், பெரும்பான்மையான மக்கள் போராட்டக்காரர்கள் அமைதியாக இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஹ்மான் கூறினார்.
இதுபோன்ற போராட்டத்தை உருவாக்கிய மக்களின் கோரிக்கைகளை புரிந்து கொள்ளத் தவறினால், அரசியல்வாதிகள் தங்கள் கடமையில் தவறிவிட்டதாக அவர் வலியுறுத்தினார்.




