சீனி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை 50 ரூபாவில் இருந்து 25 சதமாக குறைத்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் ஏறக்குறைய 1600 கோடி ரூபா வரியை இழந்தது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையை கொழும்பு மேலதிக நீதவான் என்.சி. இளங்கசிங்க முன்னிலையில் நேற்று (08) நடைபெற்ற போது, இந்த தகவல் தெரிய வந்தது.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு கிலோ சீனிக்கான 50 ரூபா விசேட பண்ட வரி 25 சதமாக குறைக்கப்பட்டதன் காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 1600 கோடி ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.




