வெலிகமவில் தடைசெய்யப்பட்ட ‘உண்டியல்’ முறையின் கீழ் வெளிநாட்டு நாணயங்களை மாற்றிக் கொண்டிருந்த 27 வயதுடைய நபர் ஒருவர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து 16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள்’ கைப்பற்றப்பட்டன.
18,028 அமெரிக்க டொலர், 20,035 யூரோ, 100,000 யென் மற்றும் ஏனைய ஏழு நாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டன.
27 வயதான அவர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




