26.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

31ஆம் திகதிக்கு முன் முச்சக்கர வண்டிகள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்; மோட்டார் சைக்கிள் பதிவிற்கு புதிய நடைமுறை!

சேஸ் இலக்கத்துடன் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கு பதிவு செய்ய முடியாத வாகன பாவனையாளர்கள் வெள்ளிக்கிழமை முதல் வருமான உரிமத்துடன் பதிவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

49CC பைக்குகளைப் பயன்படுத்துபவர்கள் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான உரிமத்தைப் பெறுவதற்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் அந்தந்தப் பகுதி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒரு எரிபொருள் நிலையத்தை பரிந்துரைக்குமாறு அமைச்சர் டுவிட்டரில் கேட்டுக் கொண்டார்.

ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து மட்டுமே எரிபொருளைப் பெற அனுமதிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

தோட்ட உபகரணங்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் ஏனைய உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் தேவைகளை அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தேவையை கொள்வனவு செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையமொன்றை பரிந்துரைக்கும் போது, ​​தனிநபர்களின் வாராந்த எரிபொருள் தேவைகளை குறிப்பிடுமாறு அமைச்சர் விஜேசேகர அழைப்பு விடுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!