25.1 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

போராட்டத்திற்கு ஆதரவளித்த பொலிஸ் உத்தியோகத்தர் கூரிய ஆயுதத்துடன் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போது கைது!

சனிக்கிழமை (9) இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது, மஹரகம நகரில்  போராட்டக்காரர்களிற்கு ஆதரவு வழங்கிய பொலிஸ் சார்ஜன்ட் இன்று அதிகாலை கொழும்பு, கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போது கூரிய ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சார்ஜன்ட் ஹோமாகம, மாகமனையில் உள்ள நாரஹேன்பிட்டி பொலிஸ் கராஜில் கடமையாற்றியவர்.

அவரிடமிருந்த 10 அங்குல நீளமும் 2 அங்குல அகலமும் கொண்ட ஆயுதத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸ் சீருடையில் செருப்பு அணிந்திருந்த நபர் மீது இராணுவ அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் நடத்திய சோதனையில் கூரிய ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக சார்ஜன்ட் கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment