மன்னார், நொச்சிக்குளம் பகுதியில் வாள்வெட்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (10) காலை 10.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.
உயிலங்குளம் பகுதியை சேர்ந்த குழுவொன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மாட்டு வண்டி சவாரியில் இடம்பெற்ற முரண்பாட்டை தொடர்ந்து இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.





