குற்றம்

துன்னாலையில் முதியவர் கொண்டு சென்ற மிளகாய்த்தூள் பொதியை பறித்துச் சென்ற திருடர்கள்!

வடமராட்சி துன்னாலை பகுதியில் முதியவர் கொண்டு சென்ற மிளகாய்த்தூள் பொதியை, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

நேற்று (3) மாலை இந்த சம்பவம் நடந்தது.

துன்னாலையிலுள்ள அரைக்கும் ஆலையொன்றில் மிளயாக்த்தூள் அரைப்பதற்காக கொடுத்த முதியவர், நேற்று மாலை அதை பெற்றுக்கொண்டு வரும் போது இந்த வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது.

முதியவர் நடந்து வரும் போது, வீதியோரமாக மோட்டார் சைக்கிளுடன் நின்ற இரண்டு இளைஞர்கள், அவர் கடந்து சென்றதும், பின்னால் சென்று பொதியை பறித்துக் கொண்டு தப்பியோடிள்ளனர்

முதியவர் கூக்குரலிட்டதையடுத்து அந்த பகுதியில் ஆட்கள் ஒன்றுசேர்ந்த போதும், திருடர்கள் மின்னல் வேகத்தில் மாயமாகியிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

15 வயது சிறுமி போதையூசி ஏற்றப்பட்டு கூட்டு வன்புணர்வு: 20 வயது யுவதி, 3 இளைஞர்கள் கைது!

Pagetamil

குளித்துக் கொண்டிருந்த போது புகைப்படம் எடுத்த இளைஞனை குளக்கரையில் கும்மியெடுத்த யாழ் யுவதிகள்!

Pagetamil

அவ்வளவு வெறி… மாங்குளம் பொலிஸ் கான்ஸ்டபிள் மடக்கிப் பிடிப்பு!

Pagetamil

நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை

Pagetamil

தலைமறைவாக இருந்தவரை காட்டிக் கொடுத்த காது: மகளை வல்லுறவுக்குள்ளாக்கியதால் 40 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் சிக்கிய கதை!

Pagetamil

Leave a Comment