தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்கு வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு லிட்ரோ எரிவாயு நுகர்வோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
7,500 மெட்ரிக்தொன் பெறுமதியான இரண்டு எரிவாயு ஏற்றுமதிகள் கொழும்பு துறைமுகத்தை அண்மித்து வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஒரு கப்பல் இன்று வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இரண்டாவது ஏற்றுமதி ஞாயிற்றுக்கிழமை எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வரவிருக்கும் முதல் கப்பல் எரிவாயுசுடன் நாளை முதல் எரிவாயு விநியோகம் வழமைபோல் தொடரும் என்று ஹேரத் கூறினார்.



