26.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

களை கட்டும் கள்ளச்சந்தை: எரிவாயு சிலிண்டர் ரூ.15,000

வவுனியாவில் சமையல் எரிவாயு கறுப்பு சந்தைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்திற்கு என அனுப்பப்படுகின்ற சமையல் எரிவாயுவை பதுக்கும் சில விற்பனை முகவர்கள் அதனை வேறு இடங்களில் களஞ்சியப்படுத்தி விட்டு முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சிலரின் துணையுடன் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

12.5 கிலோ சமையல் எரிவாயுவே இவ்வாறு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதனால் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சாதாரண மக்கள் பலரும் சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதுடன், இது தொடர்பில் பாவனையாளர் அதிகார சபையினர் கூட கவனம் செலுத்தவில்லை எனவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!