வீட்டுத் தோட்டம் செய்யுங்கள்

Date:

வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய, வீட்டுத் தோட்டங்களை அமைக்குமாறு பொதுமக்களிடம் விவசாய திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த நடவடிக்கை பொதுமக்களின் வாழ்க்கையில் பங்களிக்கும் காரணியாக இருக்கும் என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றிய கலாநிதி அஜந்த டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் விதைகள், உரங்கள் மற்றும் இதர பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாய அலுவலர்களின் குடியிருப்புகள் மற்றும் பிற இடங்களில் உற்பத்தியைத் தொடங்கவும், திட்டத்தைச் செயல்படுத்தி முன்னுதாரணமாகச் செயல்படுவது கடமையும் பொறுப்பும் ஆகும் என்றார்.

உள்ளூர் உணவு உற்பத்தியில் குறைபாடுகள் இருப்பது அனைவரும் அறிந்ததே என்றும், நிலவும் நெருக்கடி காரணமாக சில பொருட்களை இறக்குமதி செய்வது மிகவும் கடினமாகி வருவதாகவும் அவர் கூறினார்.

அவரை, வெண்டைக்காய், உளுந்து, பூசணி, பாக்கு, வெண்டைக்காய் உள்ளிட்ட கீழ்நாட்டு மரக்கறிகளின் உற்பத்தி அல்லது இருப்புக்கள் தொடர்பான பிரச்சினைகள் அல்லது பற்றாக்குறைகள் எதுவும் இல்லை என்று விவசாய பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டில் கரட், பீட்ரூட் மற்றும் சாலட் இலைகள் விதைகள் உற்பத்தி செய்யப்படாததால் தட்டுப்பாடு நிலவுகிறது என்றார்.

இவ்வாறான விதைகளை விரைவாக இறக்குமதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கலாநிதி டி சில்வா தெரிவித்தார்

spot_imgspot_img

More like this
Related

4 வருடம் சேர்ந்த வாழ்ந்த 22 வயது காதலியை கொன்று புதைத்த காதலன் தலைமறைவு!

தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக்...

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்