26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

ஓடியோடி எரிபொருள் நிரப்புபவர்களிற்கு சிக்கல்: புது செயலி உருவாக்கம்!

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட செயலி இன்று பல இடங்களில் சோதனை செய்யப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த செயலி இலங்கை காவல்துறையின் தகவல் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வரும் நுகர்வோரின் நம்பர் பிளேட் விவரங்கள் உள்ளிடப்படும் என்றும், உள்ளிட்ட தரவுகள் பிற பயன்பாட்டு பயனர்களுடன் நிகழ்நேரத்தில் பகிரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நம்பர் பிளேட்டை உள்ளீடு செய்தவுடன், அதே வாகனம் ஒரே நாளில் மற்றொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை நிரப்பியதா மற்றும் எரிபொருள் நிரப்பிய வரலாறு குறித்து தெரிவிக்கும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment