கொடிகாமம் துயிலுமில்ல காணி அளவீடு தடுத்து நிறுத்தம்!

Date:

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியை இராணுவமுகாம் விஸ்தரிப்பதற்காக அளவீடு செய்யும் முயற்சி இன்றையதினம் தடுத்து நிறுத்தப்பட்டது.

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருக்கின்ற தனியார் காணி இராணுவமுகாம் விஸ்தரிப்பதற்காக இன்றைய தினம் அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களம் பிரதேச செயலக அதிகாரிகளோடு துயிலும் இல்லத்திற்கு வந்திருந்தனர்.

இதை அடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செய்ய செ.மயூரன், சாவகச்சேரி நகர சபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் நில அளவை நடவடிக்கையை தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து நிலஅளவைத் அளவீடு செய்யாமல் திரும்பி சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழட்டுச்சிங்கம் வருமாம்: ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் போடும் ‘சீன்’!

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி...

இலங்கையில் இனி சிம் அட்டை பெறும் முறையில் பெரும் மாற்றம்

சட்டவிரோதச் செயல்களுக்கு அலைபேசி இணைப்புகள் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய இணைப்புகளுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்