26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

எதிர்பார்ப்பின் மத்தியில் பாராளுமன்றம் கூடுகிறது!

பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் இன்று  முக்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்ததையடுத்து, புதிய பிரதி சபாநாயகர் ஒருவர் இன்று பெயரிடப்படவுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை பிரதி சபாநாயகர் பதவிக்கு நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி நேற்று தீர்மானித்துள்ளது.

ஆளும் கட்சியால் சபாநாயகர் வேட்பாளர் முன்மொழியப்பட்டால், வாக்கெடுப்பு நடத்தப்படும்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை வைத்திருக்கும் கட்சியை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

இந்த வார நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், இன்று வாக்கெடுப்பு நடைபெற்றால் என்ன முடிவெடுப்பது, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஆராய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் கலந்துரையாடல் நடத்தவுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment