சரத் பொன்சேகாவின் மனநிலையை சோதிக்க வேண்டும்: ஹரின் காட்டம்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியின் பேச்சாளர்களின் பட்டியல் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஒப்புதலுடன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் தயாரிக்கப்பட்டது. எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இருந்து ஆறு நாள் நடைப்பயணமும், மே தின பேரணியும் தமது கடின உழைப்பு, பணத்தை செலவழித்து மேற்கொள்ளப்பட்டது. எமக்கு எதிராக முறைப்பாடு செய்யும் சரத் பொன்சேகாவின் மனநிலையை ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது தலைவர் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார. அது தெரியாமல் சரத் பொன்சேகா தான் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் என நினைத்துக் கொண்டு செயற்பட்டமை குறித்து வருந்துவதாகவும் பெர்னாண்டோ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறிமதாச தலைமையில் நேற்று (2) நடைபெற்ற கட்சிக் குழுக் கூட்டத்தில் சரத் பொன்சேகாவுக்கு கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், சஜித் பிறமதாச இந்த சம்பவத்திற்காக தன்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியதாகவும், பொன்சேகா செய்ததை அவர் ஏற்கவில்லை என்றும் அவர் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கலந்து கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது ஈரான்

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்