24.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
குற்றம்

ஆளில்லாத பகுதியில் வழிமறிக்கப்பட்டு தங்கச்சங்கிலி அறுப்பு!

கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட அல்லாரை பகுதியில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் வயோதிபத் தம்பதியை வழிமறித்து, இரண்டு பவுண் தங்கச்சங்கிலியை அபகரித்து சென்றுள்ளனர் வழிப்பறி திருடர்கள்.

நேற்று முன்தினம் மாலை இந்த சம்பவம் நடந்தது.

மரண வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வயோதிபத் தம்பதியை, அல்லாரை, வெள்ளாம்போக்கடி பகுதியில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் வழிப்பறி திருடர்கள் வழிமறித்து, 2 பவுண் தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

வழிப்பறி திருடர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளரை பொலிசார் கைது செய்ததுடன், மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.

கொடிகாமம் பொலிசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ராகமவில் கொடூர கொலை

east tamil

குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!

east tamil

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

Leave a Comment