இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று இரவு எரிபொருள் விலைகளை அதிகரிக்காது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை இன்று இரவு முதல் அதிகரிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகள் தவறானவை என அவர் தெரிவித்துள்ளார்.




