இலங்கை எரிபொருள் கொள்வனவிற்கு மேலும் 500 மில்லியன் டொலர்: இந்தியா உதவி

Date:

இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு மேலதிகமாக 500 மில்லியன் டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 450 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்க பங்களாதேஷ் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் இலங்கைக்கு வருவதற்கு சுமார் ஆறு மாதங்கள் ஆகும் எனவும் அது பகுதி பகுதியாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

இந்த இடைப்பட்ட காலத்தில், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு இலங்கை நிதியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இறப்புக்கு ஆதாரமாக வங்கிக்கு சகோதரியின் எலும்புக் கூட்டுடன் வந்த நபர்

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, வயதான பழங்குடியின நபர் ஒருவர், தனது...

19 பிக்குகள் போதைப்பொருள் பாவித்தது உறுதி

சுமார் 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹாஷ் ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க...

அல்லைப்பிட்டி சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்தது!

அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் "தபோவனம்" சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. விசமிகளால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்